பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆசிஆட்டா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவை இணைந்து சுவாசம் தரும் மரங்கள் எனும் சுற்றுச்சூழல் பாடலை அறிமுகப்படுத்துகின்றது.

ஏப்ரல் 06, 2021        கொழும்பு

 

news-1

படத்தில் இடமிருந்து வலம்:- சுற்றுச்சூழல் அமைச்சரின் தனியார் செயலாளர், கலாநிதி புத்திக இடமல்கோட, சுற்றுச்சூழல் அமைச்சின் மேலதிக செயலாளர், W.D.S.C. வெலிவட்ட, சுற்றுச்சூழல் அமைச்சரின் ஆலோசகர், கௌரவ சரத் சந்திரசிரி விதான, பாத்ய ஜெயகொடி, சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டாக்டர். அனில் ஜசிங்ஹ, சுற்றுச்சூழல் அமைச்சர்இ கௌரவ மஹிந்த அமரவீர, கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க, கொழும்பு நகராட்சி மன்றம் நகராட்சி ஆணையர், ரோஷனி திசாநாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நானாயக்கார மற்றும் யலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் வர்த்தக மற்றும் ஊடக பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க

news-1

படத்தில் இடமிருந்து வலம்: சங்கா தினேத், பாத்ய ஜெயகோடி, சந்ததூஷ் வீரமான், உமரியா சின்ஹவன்சா, மாநில கலாச்சார அமைச்சகம், இயக்குநர், தரணி அனோஜா கமகே, கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க, சுற்றுச்சூழல் அமைச்சர், கௌரவ மஹிந்த அமரவீர, சுற்றுச்சூழல் அமைச்சின், ஆலோசகர் கௌரவ சரத் சந்திரசிரி விதான, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நானாயக்கார, கொழும்பு நகராட்சி மன்றம், நகராட்சி ஆணையர், ரோஷனி திசாநாயக்க, மற்றும் யலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் வர்த்தக மற்றும் ஊடக பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க

இலங்கை கலாச்சாரத்தோடு ஒருங்கிணைக்கும் வகையில் காடழிப்பை தடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘சுபமுகூர்த்தத்தில் மரக்கன்று நடுதல் எனும் திட்டம், அதன் சுற்றுச்சூழல் பாடலான ‘சுவாசம் தரும் மரங்கள்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் சுதந்திர சதுக்கத்தில் ஒரு அடையாள மரம் நடும் விழாவும் நடாத்தப்பட்டது. இந்த தேசிய சுற்றுச்சூழல் முயற்சியை இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (டயலொக்) சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்து மேற்கொள்கின்றது.

சுதந்திர சதுக்கத்தில் நாக மரம் செயற்றிட்ட மேம்பாடிற்கான Thuru app சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் முக்கிய பணியாளர்களினால் புதுப்பிக்கப்பட்டது. துரு என்பது ‘சுவாசம் தரும் மரங்களுக்கு உயிர்கொடுப்போம்’ முயற்சியின் கீழ் நடத்தப்பட்டவை உட்பட, நகர்ப்புற வனவியல் முயற்சிகளின் முன்னேற்றத்தைப் புதுப்பிக்க மரம் பயிரிடுவோருக்கான ஒரு சமூக ஊடக App ஆகும்.

மறுகட்டமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு இடமாக, சுவாசம் தரும் மரங்களுக்கு உயிர்கொடுப்போம்’ பாடல் ரோஷினி திசானாயகே அவர்களால் எழுதப்பட்டதுடன் நாட்டின் பிரபலமான கலைஞர்களான பாத்திய ஜெயகோடி, சந்தூஷ் வீரமான், உமரியா சின்ஹவன்ச, சனுக விக்ரமசிங்க மற்றும் சங்க தினேத் ஆகியோரால் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சுபமுகூர்த்தத்தில் மரக்கன்று நடுதல் “சுவாசம் தரும் மரங்கள்” செயற்றிட்டத்தின் கீழ், இலங்கை மக்களின் கலாசார பண்டிகையான சித்திரை வருடப் பிறப்பின்போது, சுபமுகூர்த்தத்தில் காலை 6.40 மணிக்கு ஒரு மரத்தினை நடும் போது ஏப்ரல் 16 ஆம் திகதி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 5 மில்லியன் மரங்கள் நடப்படும். இந்த முன்முயற்சி ஊக்க உணர்வைத் தூண்டுவதற்கு பாடுபடுவதுடன், மேலும் இலங்கையின் குடிமக்களை ஒன்றிணைத்து தேசத்தின் முன்னேற்றத்திற்கான பொதுவான சுற்றுச்சூழல் இலக்கை நோக்கி செயல்படுகிறது.

காலநிலை மாற்றம் காரணமாக வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த நாட்டின் வன அடர்த்தியை 30% ஆக உயர்த்தவும், வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கார்பன்டை ஆக்சைடு அளவைக் குறைக்கும் நோக்கத்துடனும் ஆரோக்கியமாக, வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கும். சுவாசம் தரும் மரங்களுக்கு உயிர்கொடுப்போம் பிரச்சாரம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது.